அரும்புகள் மலரட்டும்: நெகிழ வைக்கும் கதை - நிஜத்திலும் நிகழ்கிறது

Sunday 8 March 2015

நெகிழ வைக்கும் கதை - நிஜத்திலும் நிகழ்கிறது

ஒரு டீச்சர் தன் வகுப்பு மாணவர்களிடம் வெற்றுத் தாள்களைக் கொடுத்து, ஒவ்வொருவரையும், வகுப்பில் உள்ள மற்ற மாணவர்கள் அனைவரின் பெயரையும் அதில் எழுதச் சொன்னார்.

ஒரு பெயருக்கும், அடுத்த பெயருக்கும் இடையே சிறிது இடைவெளியுடன் !

மாணவர்கள் எழுதி முடித்தவுடன், டீச்சர் சொல்கிறார் -

“ஒவ்வொரு பெயருக்கும் எதிரே, அவர்களிடம் நீங்கள் காணும் – உங்களுக்கு பிடித்த நல்ல விஷயம் ஒன்றைப்பற்றி எழுதுங்கள்.”

மாணவர்கள் ஒவ்வொருவரும், யோசித்து, தங்களுக்கு தோன்றியதை எல்லாம் எழுதிக் கொடுத்தனர்.

வாரக்கடைசி – டீச்சர் ஒவ்வொரு மாணவனின் பெயரிலும் ஒரு தாள் தயார் செய்து, அதில் மற்ற மாணவர்கள்

அவனைப்பற்றி எழுதியிருந்த உயர்வான
வார்த்தைகளை வரிசையாகத் தொகுத்து எழுதி கீழே தன் கையெழுத்தையும் போட்டு,
மாணவர்கள் ஒவ்வொருவராக அழைத்து
அவர்களின் பெயரிட்ட தாளைக் கொடுத்தார்.
மாணவர்கள் அவரவர் இடத்திற்கு சென்று
அமர்ந்து படிக்கிறார்கள்.

10 நிமிடங்கள் – வகுப்பறையே
சந்தோஷக்கடலில் மிதக்கிறது.

“நான் இவ்வளவு சிறப்பானவனா..?
என்னைப் பற்றி மற்றவர்கள் இவ்வளவு நல்ல
அபிப்பிராயம் வைத்திருக்கிறார்களா ?” –
அத்தனை மாணவர்களும் ஆனந்தத்தில் திளைக்கிறார்கள் !

அந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள
குணாதிசயங்களை மேலும் மேலும் வளர்த்துக் கொள்ள முயற்சி செய்கிறார்கள்.

தன்னைப்பற்றி உயர்வாகச் சொன்னதற்காக, ஒவ்வொரு மாணவனுக்கும்,சக மாணவர்கள் மேல் அன்பு அதிகரிக்கிறது.
பல வருடங்கள் கழிகின்றன.

அந்த வகுப்பில் படித்த
மாணவன் ஒருவன் வளர்ந்த பிறகு ராணுவத்தில் சேர்கிறான். பிறகு போர் ஒன்றில் வீர சாகசம் புரிந்து,
மரணம் அடைகிறான்.
அவன் உடல் ராணுவ மரியாதையுடன்
சொந்த ஊர் கொண்டு வரப்படுகிறது.

இறுதிச் சடங்கில்,
கலந்து கொள்ள அந்த டீச்சரும் செல்கிறார்.மிடுக்கான ராணுவ உடையில் -
நாட்டின் தேசியக்கொடி
போர்த்தப்பட்டு,சவப்பெட்டியிலும் கம்பீரத்துடன் காணப்பட்ட அந்த மாணவனைக் கண்டு பெருமிதத்துடன் கண் கலங்குகிறார்.

ஒவ்வொருவராக வரிசையில் வந்து இறுதி மரியாதை செலுத்துகின்றனர். டீச்சர் கடைசியாகச் செல்கிறார்.பின்னர், பக்கத்திலேயே நிற்கிறார்.

உடலைத் தாங்கி வந்த, ராணுவ சக வீரர்கள்
அருகிலேயே நின்றிருந்தனர்.

ஒரு வீரர் கேட்கிறார் -”நீங்கள் சரவணனின் 10ஆம் வகுப்பு டீச்சரா ?” என்று. டீச்சர் ஆம் என்று தலையசைக்கிறார்.

பின்னர் அந்த ராணுவ வீரன் சொல்கிறான் “டீச்சர் -எனக்கு உங்களைத் தெரியும். சரவணன் உங்களைப்பற்றி எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்பான்”

சடங்குகள் முடிந்த பின்னர், சரவணனின் பழைய வகுப்புத் தோழர்கள் அங்கு டீச்சருடன் ஒன்றாக நின்றிருந்தனர்.

அங்கு சரவணனின் தாயும் தந்தையும் வருகின்றனர்.அந்த சோகத்திலும் தந்தை டீச்சரிடம் கூறுகிறார் -

“டீச்சர் நான் உங்களுக்கு ஒன்றைக் காட்ட வேண்டும்.இது சரவணன் போரில் கொல்லப்பட்டபோது, அவனது பாக்கெட்டிலிருந்து இறுதியாக கண்டெடுக்கப்பட்டது”.

அவர் காட்டியது, பெரிய பர்ஸ் ஒன்றில் பத்திரமாக -பல முறை மடிக்கப்பட்டு, மடிப்புகள் எல்லாம் டேப் போட்டு ஒட்டப்பட்டு பத்திரமாக பாதுகாக்கப்பட்ட ஒரு தாள்.

ஆமாம் – பல வருடங்களுக்கு முன்னர் அந்த டீச்சர் சரவணனைப் பற்றிய நல்ல
குணங்களை வரிசைப்படுத்தி தொகுத்து எழுதிக் கொடுத்திருந்த அதே காகிதம் தான் !

கண்ணீர்ப் பெருக்குடன் சரவணனின் தாய் கூறுகிறார் -

“ரொம்ப நன்றி டீச்சர் – உங்கள் கடிதத்தை அவன் உயிரையும்விட மேலாக விரும்பினான்.

இத்தனை வருடங்களும்
அதை அவ்வளவு பத்திரமாக பாதுகாத்து வந்தான்.

அவனுக்கு வாழ்க்கையில் மிகுந்த தன்னம்பிக்கையும்,
பிடிப்பும் ஏற்பட இந்த காகிதம் தான் உதவியது.”

டீச்சரும் மற்ற மாணவர்களும் சரவணனை நினைத்து கதறி அழுகின்றனர்..,

ஆம்,என் இனிய நண்பர்களே.,

இந்த வாழ்க்கைப் பாதை கரடு முரடானது.

எங்கே துவங்கும் – எப்படி இருக்கும் -எப்போது,எப்படி முடியும் ? யாருக்கும் தெரியாது.

இருக்கின்ற காலத்தில் – நம்முடன் இருப்பவர்கள அவர்களின் நல்ல இயல்புகளுக்காக நேசிப்போம்.
நல்லதும் கெட்டதும் கலந்தது தான் மனித குணம்.

ஒருவர் விரும்பத்தகாத குணத்தைக் கொண்டிருந்தால்,நாம் அதை விரும்பவில்லை என்பதை எரிச்சல் காரணமாக,அநேகமாக உடனேயே வெளிப்படுத்தி விடுகிறோம்.

ஆனால், ஒருவரிடம் உள்ள நற்பண்புகளை, குணங்களை -
அநேகமாக – நாம் வெளிப்படையாக பாராட்டத்
தவறி விடுகிறோம்.கூடாது என்றல்ல. அதன் அவசியம் நமக்குத் தெரிவதில்லை.

சாம்பாரில் சற்று உப்பு அதிகமாக இருந்தால் கூட உடனடியாக மனைவியிடம் அதைக்கூறும் கணவர்கள், அந்த சமையல்
நன்றாக இருக்கும்போது – பாராட்டுவது இல்லை !

பாராட்ட வேண்டும் என்று தோன்றுவதில்லை !
இந்த உலகில் அனைத்து உயிர்களுமே,
பாராட்டுதலை எதிர்பார்க்கிறது. கிடைத்தால் சந்தோஷப்படுகிறது !

நீங்களோ, நானோ -
யாருமே அதற்கு விதிவிலக்கல்ல.
வெளிப்படையான பாராட்டுதல் -
அவர்களிடையே தன்னம்பிக்கையை கொடுக்கும்.

நல்ல குணங்கள் மேலும் மேம்பட உதவும்.
தோழமை உணர்வு அதிகப்பட உதவும்.

கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

26 comments:

  1. அருமையானதோர் பகிர்வு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நண்பரே.....

    த.ம. +1

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க நண்பரே

      Delete
  2. சிறந்த வழிகாட்டல்
    சிறந்த கருத்துப் பகிர்வு
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க ஜயா

      Delete
  3. மகிழ வைத்த நிகழ்வு
    நெகிழ வைத்தது நெஞ்சில்!
    சாகா வரம் பெற்ற சரவணின் புகழ்
    அவர் இல்லாவிடினும் வாழும் வளமுடன்!
    த ம வாக்கு 3

    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com



    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க ஜயா

      Delete
  4. அருமையான பதிவு, கண்களில் நீரை வரவழைத்தது. ஆசிரியர் போற்றுதலுக்குரியவர்.

    உங்களுக்கென் வாழ்த்துக்கள்.
    நட்புடன்

    கோ

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க சகோதரர்

      Delete
  5. ஒரு A4 தாளில் அடுவரின் ப்ளஸ் எழுதுங்க என்று சொல்லி அதை வகுப்பில் வாசிக்க சொன்னேன். அந்த வகுப்பு மாணவர்களிடம் இருக்கும் மரியாதையான தோழமை பிற வகுப்புக்களில் இல்லை ... (இது ஒரு ஜேசி விளையாட்டு)

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க சகோதரர்

      Delete
  6. //ஒருவர் விரும்பத்தகாத குணத்தைக் கொண்டிருந்தால்,நாம் அதை விரும்பவில்லை என்பதை எரிச்சல் காரணமாக,அநேகமாக உடனேயே வெளிப்படுத்தி விடுகிறோம்.//

    அருமையான் பகிர்வு....

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க சகோதரர்

      Delete
  7. சிறப்பான பகிர்வு சகோதரரே... நெகிழ்ந்து விட்டேன்...

    பாராட்டும் நன்றியும் உடனே சொல்லி விட வேண்டும்... இதைப் பற்றி இரு பதிவுகள் எழுதி உள்ளேன்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க சகோதரர்

      Delete
  8. எந்த வலைத்தளத்திலும் உங்களைப் பார்க்க முடிவதில்லையே... வேலை அதிகமோ...?

    ReplyDelete
    Replies
    1. அண்ணா நலம் தானே? சைனஸ் பிரச்சனை ஆரம்ப நிலை தான் ஆனாலும் தொந்தரவு நிரைய. தற்போது நலம் அண்ணா

      Delete
  9. நெகிழ்ந்துதான் போனேன் நண்பரே
    தம +1

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க சகோதரர்

      Delete
  10. நெடுநாள் கழி்த்து வந்து, நெஞ்சைப் பிழிந்து விட்டீர்கள் பாண்டியன்!
    த.ம.கூடுதல்-1

    ReplyDelete
    Replies
    1. தொடர்பில் இல்லாததற்கு மன்னனியுங்கள் ஜயா. நிரைய காரணங்கள். அலைபேசியியில் அழைக்கிறேன் ஜயா. நன்றிங்க ஜயா.

      Delete
  11. நல்லதையே நினைக்க வேண்டும், நல்லதையே செய்ய வேண்டும் என்பதனை உணர்த்திய நல்ல பதிவு. மணவை ஆசிரியர் அ.பாண்டியன் அவர்களுக்கு நன்றி.
    த.ம.8

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க ஜயா

      Delete
  12. அன்புள்ள அய்யா,

    நெகிழ வைக்கும் கதை - நிஜத்திலும் நிகழ்கிறது. சரவணன் போரில் கொல்லப்பட்டபோது, அவனது பாக்கெட்டிலிருந்து இறுதியாக கண்டெடுக்கப்பட்டது அந்த டீச்சர் சரவணனைப் பற்றிய நல்ல
    குணங்களை வரிசைப்படுத்தி தொகுத்து எழுதிக் கொடுத்திருந்த அதே காகிதம் தான் !
    நல்லவற்றைக் கற்றுக் கொடுத்தால் நிச்சயம் மாணவர் மனதில் ஆசிரியர் இடம் பிடிப்பார்.
    நன்றி.
    த.ம. 10.

    ReplyDelete
  13. வணக்கம்
    சகோ...
    பதிவை படித்த போது கண்ணில் கண்ணீர் வந்து விட்டது.. இந் பதிவுக்கு இந்த வார்த்தைகள் மகுடம்..

    எங்கே துவங்கும் – எப்படி இருக்கும் -எப்போது,எப்படி முடியும் ? யாருக்கும் தெரியாது.
    உண்மையான வரிகள்.. பகிர்வுக்கு நன்றி த.ம 11

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  14. நெஞ்சை நெகிழ வைத்தது உண்மைதான் சகோ. கருத்துள்ள ஆக்கம். அனைவராலும் கவனிக்கப்படவேண்டிய ஒன்றும் . தொடருங்கள்.
    நெடுநாள் ஆகிவிட்டது. தங்கள் வலை வந்து. எப்படி இருக்கிங்க. தங்களை மனைவியை கேட்டதாக கூறவும்.

    ReplyDelete
  15. //இந்த உலகில் அனைத்து உயிர்களுமே, பாராட்டுதலை எதிர்பார்க்கிறது. கிடைத்தால் சந்தோஷப்படுகிறது !//

    தங்களுக்கும் தங்களின் இந்த மிக அருமையான பகிர்வுக்கும் என் பாராட்டுக்கள். வாழ்த்துகள். நன்றிகள்.

    ReplyDelete